மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

கேரள திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்குவது, திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை கேரள அரசிடம் தொடர்ந்து மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன.
ஆனால் அவற்றில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஜனவரி 22ம் தேதி ஒட்டுமொத்த திரையுலகமும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கேரளா பிலிம் சேம்பர் தலைவர் அனில் வி தாமஸை அழைத்து கேரளா கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் இவர்களது குறைகளை நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளதன் பேரில் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மலையாள திரையுலகம் கைவிட்டுள்ளது.