‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, படப்பிடிப்புகளை நிறுத்தினர். கூட்டமைப்பும், திரைப்பட வர்த்தக சபையும் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தெலுங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்களையும் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். கடந்த சில நாட்களாக நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்துள்ளார்கள்.
30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில் 22.5 சதவீத ஊதிய உர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 15 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வு வழங்கப்படும்.
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இரு தரப்பினரும் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.