பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தெலுங்குத் திரையுலகத்தில் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு கடந்த மூன்று வாரங்களாக ஸ்டிரைக் நடத்தி வந்தது. 30 சதவீத ஊதிய உயர்வு கோரி, படப்பிடிப்புகளை நிறுத்தினர். கூட்டமைப்பும், திரைப்பட வர்த்தக சபையும் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தெலுங்கானா, ஆந்திர மாநில அமைச்சர்களையும் தயாரிப்பாளர்கள் சந்தித்துப் பேசினார்கள். கடந்த சில நாட்களாக நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனிடையே, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தலையீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பிலும் பேசி ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வந்து இன்று முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க சம்மதித்துள்ளார்கள்.
30 சதவீத ஊதிய உயர்வு கோரிய நிலையில் 22.5 சதவீத ஊதிய உர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் ஆண்டில் 15 சதவீதம், இரண்டாம் ஆண்டில் 2.5 சதவீதம், மூன்றாம் ஆண்டில் 5 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்வு வழங்கப்படும்.
பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக இரு தரப்பினரும் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.