கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படம் வெளியானது. சமீப காலமாகவே சீரியசான படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பஹத் பாஸில் இந்த படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அஞ்சனா ஜெயபிரகாஷ் இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார்.
அதேசமயம் கடந்த 2015ல் வெளியான பிரேமம் படத்திலேயே இவருக்கு நடிக்க அழைப்பு வந்தது. மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த செலினா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான அஞ்சனா ஜெயபிரகாஷ் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த கதாபாத்திரத்தில் இருந்து இவர் விலக்கப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
அந்த படத்தின் மூலம் மடோனாவுக்கு கிடைத்த புகழ் நாடறிந்த ஒன்று. சினிமாவில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ள அஞ்சனா ஜெயப்பிரகாஷ், இத்தனை வருடங்கள் கழித்து தற்போது பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் துருவங்கள் பதினாறு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட சில படங்களிளும் நடித்துள்ளார் அஞ்சனா ஜெயபிரகாஷ்