லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யஷ் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யஷ் தற்போது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாழ் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து ரசித்துள்ளார்.
அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு அதிகாரிகளில் ஒருவர் யஷ் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் இலங்கையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை தேர்வு செய்வதற்காக வந்துள்ளார் என்கிற தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.