டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியால் பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் கன்னட நடிகர் யஷ். இதைத்தொடர்ந்து அவரது அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் யஷ் தனது அடுத்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக இலங்கையில் முகாமிட்டு உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் யஷ் தற்போது இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள யாழ் தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்து ரசித்துள்ளார்.
அதே சமயம் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள இலங்கை அரசு அதிகாரிகளில் ஒருவர் யஷ் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளதுடன் அவர் இலங்கையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு நடத்த சில இடங்களை தேர்வு செய்வதற்காக வந்துள்ளார் என்கிற தகவலையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.




