முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! |
மைசூரு : கன்னட நடிகர் தர்ஷன் பண்ணை வீட்டில் சட்டத்துக்கு புறம்பாக வளர்த்து வந்த நான்கு அபூர்வ வெளிநாட்டு பறவைகளை வனத்துறை மீட்டுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா சாலையில் கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீடு அமைந்துள்ளது. மைசூரு வரும் போதும், நீண்ட படப்பிடிப்புக்கு பின்னரும் தர்ஷன் பண்ணை வீட்டுக்கு வந்து ஓய்வு எடுப்பது வழக்கம். இங்கு பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வளர்க்கிறார். இந்திய வன விலங்கு சட்டப்படி, தனியார் நபர்கள் வளர்க்கும் பறவைகள், விலங்குகளுக்கு வனத்துறையிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
இதற்கிடையில், வனத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள், தர்ஷன் பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர். அப்போது அனுமதி பெறாமல் வளர்த்து வந்த நான்கு அபூர்வ வெளிநாட்டு ரக வரித்தலை வாத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. தர்ஷன் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இது குறித்து, வனத்துறை அதிகாரி பாஸ்கர் கூறியதாவது: இத்தகைய வாத்துகள் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். வனப்பகுதியில் சுதந்திரமாக இருப்பதற்கு விட வேண்டும். மிருகக் காட்சி சாலையில் வளர்ப்பதும் குற்றமே. எனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பறவைகள், டி.நரசிபுரா அருகில் உள்ள ஹதினார் ஏரியில் விடுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறப்படும். மேலும் பல பறவை இனங்கள் பண்ணை வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இவற்றை வளர்க்கலாம். ஆனால் உரிமையாளருக்கான சான்றிதழ் காண்பிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.