வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் | தனுஷ் மருமகன் நடிக்கும் அடுத்த படம்: தாத்தா கஸ்தூரிராஜா தொடங்கி வைத்தார் | சித்திரம் பேசுதடி ஹீரோயினுக்கு சாருனு பெயர் வைத்தது ஏன்? மிஷ்கின் | மீண்டும் துப்பாக்கி பயிற்சியில் இறங்கிய அஜித் | ஆபாச படத்தைக் காட்டி 2 கோடி கேட்டு மிரட்டிய நடிகை |

மாண்டியா : குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் தர்ஷன், ரவிசந்திரன், நடிகை ரச்சிதா ராம் ஆகியோர் நடித்த கிராந்தி திரைப்படம், வரும் 26ம் தேதி குடியரசு தினம் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். 'கிராந்தி' யோத்வசாவை கொண்டாடுங்கள்' என பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா, மத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், 'இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நம் நாட்டின் அரசியல் சாசனம் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரச்சிதா ராம், 'குடியரசு தினத்தை மறந்துவிட்டு, 'கிராந்தி'யை கொண்டாட வேண்டும்' என, பேசியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிரான வெளிப்படையான அறிக்கையானது, அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, அவரை நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.