வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கேரளாவில் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடக்கிறது. இதனை கேரள அரசின் கலாசித்ர அகாடமி நடத்துகிறது. பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள், பெண்கள் இயக்கிய படங்கள் இதில் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேரள சர்வதேசப் பெண்கள் திரைப்பட விழா கோழிக்கோட்டில் தொடங்கியது.
இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய 'அசங்காதிதார்' என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான 'பிரீடம் பைட்' என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். பொதுவாக இந்த விழாவில் ஓடிடியில் வெளியான படங்கள் திரையிடப்படுவதில்லை. இதனை காரணம் காட்டி அசங்காததிதார் படத்தை நிராகரித்து விட்டனர்.
இந்த விதியை மாற்ற வேண்டும். எல்லா தளத்திலும் வெளியாகும் படங்களை வெளியிட வேண்டும் என்று கேரள பெண் இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சர்வதே திரைப்பட தொடக்க விழாவில் இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி மேடை ஏறிச் சென்று அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் கைது செய்யவில்லை.
இது திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இயக்குனர் லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.




