முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

கடந்த 2012ம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் சென்னை, கொச்சி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் இருந்து 2 யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகள் அவற்றை பெரும்பாவூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
யானை தந்தங்களை வீட்டில் வைத்திருக்க அது எப்படி கிடைத்தது என்பது குறித்து விளக்கம் அளித்து வனத்துறையிடம் அனுமதி சான்று வேண்டும். ஆனால் மோகன்லாலிடம் அதற்கான சான்று இல்லை . இதனால் அவர் மீது வனத்துறை பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நடந்த வந்த நிலையில் மோகன்லால் யானை தந்தம் வைத்துக் கொள்ள கேரள அரசு அனுமதித்துள்ளது, எனவே அவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு மனுதாக்கல் செய்தது. ஆனால் இந்த மனுவை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சிலர் கேரள உயர்நீதி மன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இது தொடர்பாக பெரும்பாவூர் நீதிமன்றமே முடிவெடுக்க கேரள உயர்நீதி மன்றம் அனுமதி அளித்தது.
நேற்று இந்த மனு பெரும்பாவூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் வழக்கு தொடர்ந்து நடக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.