இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் வளர்ந்து வந்த இளம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஜய்பாபு. இவர் இளம் நடிகை ஒருவரை சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக அந்த நடிகை போலீசில் புகார் செய்ததை அடுத்து விஜய்பாபு மீது பலாத்கார வழக்கு தொரடப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவான விஜய்பாபு போலீசாரின் கடுமையான நடவடிக்கைகளுக்கு பிறகு இப்போது கேரளா திரும்பி உள்ளார்.
இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்யக்கூடாது. போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறி கேரள உயர்நீதி மன்றத்தில் விஜய்பாபு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இதனால் 2 நாட்கள் கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விஜய்பாபு போலீசார் முன் ஆஜரானார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்றும் விசாரணை நடந்தது.
இந்த நிலையில் போலீஸ் விசாரணைக்கு தான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும் தனது கைது தடையை நீடிக்க வேண்டும் என்றும் விஜய்பாபு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் போலீசாரும் விஜய்பாபுவிடம் விசாரணை முடிக்க கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். இரு மனுக்களையும் ஏற்ற நீதிமன்றம் விஜய்பாபுவை வருகிற 7ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது. அதோடு விஜய்பாபுவும் வழக்கு தொடர்பான சாட்சிகளையோ, வழக்கு தொடுத்தவரையோ சந்திக்கவும் தடை விதித்தது.