பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாள திரையுலகை பொருத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தாலும் கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்களது வியாபார எல்லையும் வசூல் இலக்கும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக மலையாள திரையுலகில் ஒரு ஹிட் படம் 50 கோடி வசூலை தொடுவது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன என்கிற படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
ஒரு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக என்கவுன்டர் செய்து கொல்லப்படுகின்றனர். ஆனால் வழக்கறிஞரான பிரித்விராஜ் இது அரசியல் காரணங்களுக்காக போலியாக நடத்தப்பட்ட என்கவுன்டர் என வாதிட்டு உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வருவார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.