அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி | 2015ல் தேங்காத தண்ணீர் இந்த மழையில் தேங்கியது ஏன்? : நடிகை கீர்த்தி பாண்டியன் காட்டம் | அவமானமாக உணர்கிறேன் : ஜோதிகா பட இயக்குனர் | 'ரெட் கார்ப்பெட், ரெட் கவுன்' : நிறைவேறிய ஷாரூக்கான் ஆசை | ஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா நடிகர் கைது | இப்படித்தான் டின்னர் சாப்பிடணும் - ஜான்வி கபூர் | ரஜினி பிறந்தநாளில் 'ரஜினி 170, லால் சலாம்' அப்டேட்ஸ் | நாளை டிசம்பர் 8ல் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் | கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் |
ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு மகேஷ்பாபு அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பிரமித்துப் போய் இருக்கிறார்களாம். குறிப்பாக படத்தின் முதல் பாதி பிளாக்பஸ்டர் என்றும், கிளைமாக்ஸ் அல்டிமேட் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒக்கடு, போக்கிரி, தூக்குடு படங்களைத் தொடர்ந்து அந்த பட்டியலில் அடுத்ததாக இந்த சர்க்காரு வாரி பாட்டா இடம் பிடிக்கும் என்றும் அவர்கள் படத்தைப் பாராட்டி உள்ளார்களாம். இதனால் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகமாக இருக்கின்றனர்.