ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு மகேஷ்பாபு அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பிரமித்துப் போய் இருக்கிறார்களாம். குறிப்பாக படத்தின் முதல் பாதி பிளாக்பஸ்டர் என்றும், கிளைமாக்ஸ் அல்டிமேட் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒக்கடு, போக்கிரி, தூக்குடு படங்களைத் தொடர்ந்து அந்த பட்டியலில் அடுத்ததாக இந்த சர்க்காரு வாரி பாட்டா இடம் பிடிக்கும் என்றும் அவர்கள் படத்தைப் பாராட்டி உள்ளார்களாம். இதனால் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகமாக இருக்கின்றனர்.