டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

ஸ்பைடர் படத்தின் தோல்விக்கு பிறகு மகேஷ்பாபு அடுத்தடுத்து நடித்த மூன்று படங்களும் வரிசையாக ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் நடிகர் மகேஷ்பாபு. இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பரசுராம் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஆனால் தற்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் பிரமித்துப் போய் இருக்கிறார்களாம். குறிப்பாக படத்தின் முதல் பாதி பிளாக்பஸ்டர் என்றும், கிளைமாக்ஸ் அல்டிமேட் என்றும் அவர்கள் கூறியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் ஒக்கடு, போக்கிரி, தூக்குடு படங்களைத் தொடர்ந்து அந்த பட்டியலில் அடுத்ததாக இந்த சர்க்காரு வாரி பாட்டா இடம் பிடிக்கும் என்றும் அவர்கள் படத்தைப் பாராட்டி உள்ளார்களாம். இதனால் படக்குழுவினர் ரொம்பவே உற்சாகமாக இருக்கின்றனர்.