விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார்.. அதன்பிறகு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கடந்து விட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன் திலீப் மீது விசாரணை அதிகாரிகளை கொல்ல முயற்சி செய்ததாக புதிய வழக்கு பதியப்பட்டது.. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்தார் திலீப்.
கடந்த டிசம்பர் மாதம் துவங்கிய அவரது முன்ஜாமீன் போராட்டம் நீண்ட இழுபறிக்குப் பின் முடிவுக்கு வந்து சமீபத்தில் தான் அவருக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது தன் மீது எந்த முகாந்திரமும் இல்லாமல் பதியப்பட்ட இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அதற்கு வாய்ப்பில்லை என்றால் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் திலீப் தற்போது புதிய மனு ஒன்றை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.