'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

மம்முட்டி நடிப்பில் கடந்த முப்பது வருடங்களில் நான்கு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு. தற்போது இந்தப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.மது இயக்கிவரும் இந்தப்படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தி உள்ளார் கனிகா.
மஞ்சு வாரியரை போலவே ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய கனிகா, தற்போது மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி உள்ளிட்ட சீனியர் ஹீரோக்களின் படங்களில் தவறாமல் இடம்பெற்று வருகிறார் சமீபத்தில் வெளியான மோகன்லாலின் ப்ரோ டாடி படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் கனிகா. சுரேஷ் கோபிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள பாப்பன் என்கிற படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.