விமானப்படை அதிகாரி தோற்றத்தில் தனுஷ் | பிளாஷ்பேக்: விஷம் அருந்தி வெள்ளித்திரை வாய்ப்பினைப் பெற்ற ஜே பி சந்திரபாபு | கமல்ஹாசன் சொத்து ரூ.305 கோடி, கடன் ரூ.49 கோடி | ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? |
மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் ஒரு இயக்குனரும் கூட. நான்கு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறும்போது, மம்முட்டி போன்ற மிகப்பெரிய நடிகருடன் நடிப்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லக்கூடியது என்பதில் கூடுதல் சந்தோசம். நிச்சயமாக மலையாள ரசிகர்கள் என்னை வில்லனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.