அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் ஒரு இயக்குனரும் கூட. நான்கு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறும்போது, மம்முட்டி போன்ற மிகப்பெரிய நடிகருடன் நடிப்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லக்கூடியது என்பதில் கூடுதல் சந்தோசம். நிச்சயமாக மலையாள ரசிகர்கள் என்னை வில்லனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.