பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

கடந்த 2017-ல் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கினார் மலையாள நடிகர் திலீப். இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை வாசம் அனுபவித்த பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கிட்டத்தட்ட அந்த வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்கிற நிலையில், முன்னாள் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை போலீசில் கூறினார்.
அதாவது திலீப் ஜாமினில் வெளிவந்த பிறகு பாதிக்கப்பட்ட நடிகையின் கடத்தல் தொடர்பான வீடியோக்களை தனது காரில் அமர்ந்தபடி பார்த்தார் என்றும், அந்த வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகளை கொள்வதற்காக ஆட்களை ஏவினார் என்றும் குற்றம் சாட்டினார். இவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் தற்போது திலீப் மீது புதிய வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்னும் திலீப்பிற்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திலீப் மீது குற்றம்சாட்டிய இயக்குனர் பாலச்சந்திர குமார் மீது தற்போது கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவர், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக பாலச்சந்திர குமார் அறிமுகமானார். அடிப்படையில் நான் பாடகி என்பதால் அவரது படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார். மேலும் படத்திலும் என்னை நடிக்க வைப்பதாக கூறி, கொச்சியில் உள்ள அவரது வீட்டில் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். மேலும் என்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.
அதே சமயம் இவர் கூறும் இந்த சம்பவம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் இதில் ஆச்சரியம். இதுபோன்ற ஒரு அத்துமீறல் நடைபெற்று பத்து வருடம் கழித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது அந்தப் பெண் புகார் அளித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.