Advertisement

சிறப்புச்செய்திகள்

'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

திலீப்புக்கு எதிராக மாறிய இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்த பெண்

05 பிப், 2022 - 07:52 IST
எழுத்தின் அளவு:
Women-file-case-against-Dileep-Ex-friend-Balachandra-kumar

கடந்த 2017-ல் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கினார் மலையாள நடிகர் திலீப். இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாத சிறை வாசம் அனுபவித்த பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். கிட்டத்தட்ட அந்த வழக்கில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது என்கிற நிலையில், முன்னாள் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திர குமார் என்பவர் திலீப் மீது சில திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை போலீசில் கூறினார்.

அதாவது திலீப் ஜாமினில் வெளிவந்த பிறகு பாதிக்கப்பட்ட நடிகையின் கடத்தல் தொடர்பான வீடியோக்களை தனது காரில் அமர்ந்தபடி பார்த்தார் என்றும், அந்த வழக்கு விசாரணை செய்யும் அதிகாரிகளை கொள்வதற்காக ஆட்களை ஏவினார் என்றும் குற்றம் சாட்டினார். இவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் போலீசார் தற்போது திலீப் மீது புதிய வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இன்னும் திலீப்பிற்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திலீப் மீது குற்றம்சாட்டிய இயக்குனர் பாலச்சந்திர குமார் மீது தற்போது கண்ணூரை சேர்ந்த பெண் ஒருவர், கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக பாலச்சந்திர குமார் அறிமுகமானார். அடிப்படையில் நான் பாடகி என்பதால் அவரது படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக கூறினார். மேலும் படத்திலும் என்னை நடிக்க வைப்பதாக கூறி, கொச்சியில் உள்ள அவரது வீட்டில் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டார். மேலும் என்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வருகிறார் என்று கூறியுள்ளார் அந்தப் பெண்.

அதே சமயம் இவர் கூறும் இந்த சம்பவம் நடைபெற்றது 10 ஆண்டுகளுக்கு முன்பு என்பதுதான் இதில் ஆச்சரியம். இதுபோன்ற ஒரு அத்துமீறல் நடைபெற்று பத்து வருடம் கழித்து, சம்பந்தப்பட்ட நபர் மீது அந்தப் பெண் புகார் அளித்திருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திலீப் முன்ஜாமீன் மனு பிப் 7-க்கு தள்ளிவைப்புதிலீப் முன்ஜாமீன் மனு பிப் 7-க்கு ... சிபிஐ ஐந்தாம் பாகத்தில் வில்லனாக கன்னட நடிகர் சிபிஐ ஐந்தாம் பாகத்தில் வில்லனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in