காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

பிரபல மலையாள நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் இவர் மீது இதே வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் நடிகர் திலீப். கடந்த ஒரு மாத காலமாக கிட்டதட்ட ஐந்து, ஆறு முறை இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், அவரது சகோதரரிடமும், மைத்துனர் இடமும் போலீசார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே வரும் 7ஆம் தேதி திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.