ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது ஏற்கனவே நடிகை கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளியே வந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் இவர் மீது இதே வழக்கு தொடர்பான இன்னொரு வழக்கும் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் நடிகர் திலீப். கடந்த ஒரு மாத காலமாக கிட்டதட்ட ஐந்து, ஆறு முறை இதன் மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டு நேற்று மீண்டும் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக திலீப்பிடமும், அவரது சகோதரரிடமும், மைத்துனர் இடமும் போலீசார் 3 நாட்கள் தீவிர விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். எனவே வரும் 7ஆம் தேதி திலீப்பின் முன் ஜாமீன் மனு மீது இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்றே தெரிகிறது.