ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது.
நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டர்களில் வெளியான பின் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் சாதனைகளைப் படைக்கிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான 'அகான்டா' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான 24 மணி நேரங்களில் டிஜிட்டல் தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'அகான்டா' படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டிலும் 100 கோடி வசூலைப் பெற்ற இப்படம் ஓடிடியிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இப்படம் ஸ்டார் மா டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அப்போது டிவி ரேட்டிங்கிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.