நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது.
நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், தியேட்டர்களில் வெளியான பின் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களும் சாதனைகளைப் படைக்கிறது. அந்த வகையில் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படமான 'அகான்டா' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது.
படம் வெளியான 24 மணி நேரங்களில் டிஜிட்டல் தளங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற படம் என்ற சாதனையை 'அகான்டா' படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தியேட்டர் வெளியீட்டிலும் 100 கோடி வசூலைப் பெற்ற இப்படம் ஓடிடியிலும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இப்படம் ஸ்டார் மா டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது. அப்போது டிவி ரேட்டிங்கிலும் இப்படம் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.