நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாள நடிகர் சங்கத்திற்கு(அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2022 - 2025ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும், பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக ஜெயசூர்யாவும் அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 2 துணை தலைவர் பதவிக்கு மோகன்லால் அணி சார்பில் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து நடிகை மணியம் பிள்ளை ராஜு போட்டியிட்டார். இதில் ஆஷா சரத் தோல்வி அடைய மற்ற இருவரும் துணை தலைவராக வெற்றி பெற்றார்கள்.
11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். இதில் டொவினோ தாமஸ், லால், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். நிவின் பாலி, ஹனிரோஸ் தோல்வியடைந்தனர்.