'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
கேரள மாநிலம் கோட்டையத்தில் பிறந்தவர் பாபு நம்பூதிரி. கல்லூரி பேராசிரியாக பணியாற்றினார். கல்லூரி நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் பின்னர் வெளி நாடகங்களிலும் நடித்தார். அப்படியே சினிமாவுக்கும் வந்து விட்டார். கடந்த 40 வருடங்களாக வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 215க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். மம்முட்டியின் 'நிறக்கூட்டு', மோகன்லாலில் தூவானதும்பிகள், நிறக்கூட்டு, ஜாக்ரதா, பெருதச்சன், கேரள கபே அவர் நடித்த முக்கியமான படங்கள்.
74 வயதான பாபு நம்பூரி தற்போது சினிமாவில் இருந்து விலகி கோட்டயம் குரவிலங்காடு பகுதியிலுள்ள கணபதி கோயிலில் பூசாரியாகவும் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக வோவிலின் வராதபோது, பூசாரி பொறுப்பை ஏற்று நடத்திய பாபு நம்பூதிரி இப்போது முழுநேர பூசாரி ஆகிவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எங்கள் குடும்பமே இறைவனுக்கு சேவை செய்யும் நம்பூதிரி குடும்பம். நான் பள்ளியில் படிக்கும்போதே பூஜைகள் பற்றி தெரிந்துகொண்டேன். நம்பூதிரி சமூகத்தில் இப்போது சிலருக்கு பூஜைகள் செய்ய தெரிகிறது. ஆனால், அடுத்த தலைமுறைக்கு இதில் விருப்பம் இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. என்கிறார்.