ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் ஜனவரி மாதம் பான் இந்தியா ரிலீஸாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் புரமோஷனுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை என மாறி மாறி பயணித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அப்படி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி நெகிழ்ந்து போய் கண்கலங்க பேசினார் ஜூனியர் என்டிஆர். மேலும் கடந்த 2016ல் புனித் நடித்த 'சக்ரவியூகா என்கிற படத்திற்காக தான் பாடிய 'கேலய்யா கேலய்யா என்கிற பாடலை மேடையில் பாடிய ஜூனியர் என்டிஆர், இந்தப்பாடலை பாடுவது இதுவே முதலும் கடைசியும் ஆகும்” என்று கண்கலங்க கூறினார்.