இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் ஜனவரி மாதம் பான் இந்தியா ரிலீஸாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் புரமோஷனுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை என மாறி மாறி பயணித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அப்படி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி நெகிழ்ந்து போய் கண்கலங்க பேசினார் ஜூனியர் என்டிஆர். மேலும் கடந்த 2016ல் புனித் நடித்த 'சக்ரவியூகா என்கிற படத்திற்காக தான் பாடிய 'கேலய்யா கேலய்யா என்கிற பாடலை மேடையில் பாடிய ஜூனியர் என்டிஆர், இந்தப்பாடலை பாடுவது இதுவே முதலும் கடைசியும் ஆகும்” என்று கண்கலங்க கூறினார்.