பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
'அழகிய தீயே படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து இயக்குனர் சேரனின் 'மாயக்கண்ணாடி' ராமன் தேடிய சீதை என பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை நவ்யா நாயர். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த இவர் அவ்வப்போது சில சினிமா விழாக்களில் மட்டும் தலைகாட்டி வந்தார். கடந்த 2012க்கு பிறகு அவர் மலையாளத்தில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இந்தநிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து 'ஒருத்தீ' என்கிற படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் நவ்யா நாயர். இயக்குனர் விகே பிரகாஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நல்ல கதைகள் வரும் பட்சத்தில் மீண்டும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார் நவ்யா நாயர்.