மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
அழகிய தீயே, மாயக் கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான நவ்யா நாயர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். கேரளாவில், பட்டணங்காடு என்ற பகுதியில் சைக்கிளில் ரமேஷன் என்ற நபர் சென்றுள்ளார். அவர் மீது டிரைய்லர் லாரி ஒன்று மோதியது. இதில் ரமேஷன் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அந்த வழியே காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் லாரியை துரத்தி சென்று நிறுத்தினார். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். காயமடைந்த ரமேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா பாணியில் சேஸிங் செய்து லாரி டிரைவரை பிடித்த நவ்யாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.