ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பாணியில் உருவாகியுள்ள நரிவேட்டை | தொடரும் படம் பார்க்க வந்த ரசிகர்களிடம் வீடியோ காலில் உரையாடிய மோகன்லால் | ஐஸ்வர்யா ராய் என்னை சிறுவனாக நினைத்ததில்லை : ரன்பீர் கபூர் | ஜூனியர் என்டிஆர், பிரசாந்த் நீல் படத்தில் நட்புக்காக நடனமாடும் ஸ்ருதிஹாசன் | சேப்பாக்கத்தில் சென்னை மேட்ச் பார்த்து ரசித்த அஜித், சிவகார்த்திகேயன் | தமிழ் சினிமாவில் சிக்ஸ்பேக் சண்டை | பிளாஷ்பேக்: இளையராஜா முடிவு செய்த கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக் : தமிழில் வெளியான முதல் கன்னடப் படம் | சசிகுமார் ஜோடியாக நடித்தது ஏன்? : சிம்ரன் விளக்கம் | காஷ்மீரில் அமைதியை கெடுப்பவர்களுக்கு கடும் தண்டனை : ரஜினி வேண்டுகோள் |
அழகிய தீயே, மாயக் கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான நவ்யா நாயர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். கேரளாவில், பட்டணங்காடு என்ற பகுதியில் சைக்கிளில் ரமேஷன் என்ற நபர் சென்றுள்ளார். அவர் மீது டிரைய்லர் லாரி ஒன்று மோதியது. இதில் ரமேஷன் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அந்த வழியே காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் லாரியை துரத்தி சென்று நிறுத்தினார். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். காயமடைந்த ரமேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா பாணியில் சேஸிங் செய்து லாரி டிரைவரை பிடித்த நவ்யாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.