சந்தானத்தின் ‛லவ் பைட்' | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போகும் துல்கர் படம் | பிளாஷ்பேக் : போலீஸாக சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக் : ஒற்றைக்காலில் நடித்தே உயிர் விட்டவர் | பாடல் சர்ச்சை : மகளிர் ஆணையம் முன்பு ஆஜராகி மன்னிப்பு கேட்ட நோரா பதேகி | சல்மான்கான் - நயன்தாரா படத்தின் டைட்டில் இதுதானா ? | கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி | திரிஷ்யம் 3 படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியானது | மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் : விஜய்க்கு ஆதரவாக திரையுலகினர் குரல் | 50வது நாளில் 'யூத்' |

அழகிய தீயே, மாயக் கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான நவ்யா நாயர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். கேரளாவில், பட்டணங்காடு என்ற பகுதியில் சைக்கிளில் ரமேஷன் என்ற நபர் சென்றுள்ளார். அவர் மீது டிரைய்லர் லாரி ஒன்று மோதியது. இதில் ரமேஷன் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அந்த வழியே காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் லாரியை துரத்தி சென்று நிறுத்தினார். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். காயமடைந்த ரமேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா பாணியில் சேஸிங் செய்து லாரி டிரைவரை பிடித்த நவ்யாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.