25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
அழகிய தீயே, மாயக் கண்ணாடி போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான நவ்யா நாயர். சமீபத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். கேரளாவில், பட்டணங்காடு என்ற பகுதியில் சைக்கிளில் ரமேஷன் என்ற நபர் சென்றுள்ளார். அவர் மீது டிரைய்லர் லாரி ஒன்று மோதியது. இதில் ரமேஷன் தூக்கி வீசப்பட்டார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அந்த வழியே காரில் சென்ற நடிகை நவ்யா நாயர் லாரியை துரத்தி சென்று நிறுத்தினார். பின்னர் போலீஸிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். காயமடைந்த ரமேஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா பாணியில் சேஸிங் செய்து லாரி டிரைவரை பிடித்த நவ்யாவின் இந்த துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.