தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.