'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.