எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.




