பிறந்தநாளில் வந்த ‛விக்ரம் 63' பட அறிவிப்பு | கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த 'வாழ 2' | மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா | அந்த படத்தில் நடித்தது தவறு : கவுதம் கார்த்திக் | தன் குரலை பயன்படுத்தி மோசடி : கோர்ட் உதவியை நாடிய அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதியின் 'டிரைன், ஸ்லம்டாக்', எப்போது வரும் ? | லப்பர் பந்து வாய்ப்பை நிராகரித்தது ஏன்? : எஸ்ஜே சூர்யா | என்னிடம் தெரிவிக்காமலேயே 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடி ஆக்கினார்கள் : மிருணாள் தாக்கூர் வருத்தம் | திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு : பேட்ரியாட் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது | பவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் அவரது சகோதரியையும் விமர்சித்த காமெடி நடிகர் கைது |

தமிழில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இவர் படங்கள் வெற்றி பெற்றாலும் ஜாதி குறித்து படம் இயக்கி வெற்றி பெறுகிறார் என்கிற கருத்தும் இவர் மீது உள்ளது.
அண்மையில் மூன்றாவது முறையாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி, மோகன். ஜி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என அறிவித்தனர். பட விழா ஒன்றில் பங்கேற்ற இவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “என்னுடைய புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்குகிறது. தீபாவளிக்கு இந்த படத்தின் தலைப்பு வெளியாகும். நானும், ரிச்சர்ட்டும் மீண்டும் இணைந்துள்ள இப்படம் எங்களுடைய சக்திக்கு மீறிய படமாக உருவாகிறது.
இந்தியா முழுவதும் பேசும் படமாக இது இருக்க வேண்டும் என நினைத்து பணியாற்றி வருகிறோம். தற்போது படத்தின் நாயகிக்கான தேர்வு நடைபெறுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அடுத்தகட்ட அப்டேட்டுகள் வெளியாகும். ஒரு வருட இடைவெளிக்கு காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் அட்வான்ஸ் பெற்றேன். ஆனால், அந்த படம் துவங்க காலதாமதம் ஆகிறது. தற்போது என்னுடைய ஸ்டைலில் ஒரு படம் இயக்கி வருகிறேன் என தெரிவித்து வந்து விட்டேன்” என்றார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அவர் பேசும்போது, ‛‛தமிழகத்தில் இளைஞர்களுக்கு பிடித்தவர் அரசியல் தலைவராக வருவது நல்லது தான். ஆனால் விஜய் தவறான ரூட்டில் செல்கிறார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை, ஆனால் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார். இது வருத்தமாக உள்ளது'' என தெரிவித்தார்.




