என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கில் சீனியர் நடிகர்களில், இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக அதிரடி ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சமீபத்தில் இவர் நடித்த அகண்டா திரைப்படம் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார் பாலகிருஷ்ணா.
சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடுகளில் நடிகர்கள் நானி மற்றும் மோகன்பாபு ஆகியோர் கலந்து நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தினார்கள். இந்தநிலையில் தற்போது நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இந்த மாலை பொழுதை ரொம்பவே ரசித்து அனுபவித்தேன் என மகேஷ்பாபு கூறியுள்ளார். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்பொது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறதாம். இந்த நிகழ்ச்சி மூலம் மகேஷ்பாபு பற்றி இன்னும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.