கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி | திலீப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'பைசன்' வரவேற்பு: அனுபமா பரமேஸ்வரன் நீண்ட நன்றிப் பதிவு | திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. இதனால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரண் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சோனு சூட், ஜிஸ்ஷு சென்குப்தா, சவுரவ் லோகேஷ், கிஷோர், போசானி கிருஷ்ணா முரளி, தணிகெல்லா பரணி, அஜய், சங்கீதா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் பிறகு அசேமான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை ராம்சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். படம் வெளியான 50 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது.