பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம் சரண் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. இதனால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ராம்சரண் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
சோனு சூட், ஜிஸ்ஷு சென்குப்தா, சவுரவ் லோகேஷ், கிஷோர், போசானி கிருஷ்ணா முரளி, தணிகெல்லா பரணி, அஜய், சங்கீதா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் நடிக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த படம் வருகிற பிப்ரவரி 4ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. அதன் பிறகு அசேமான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனை ராம்சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். படம் வெளியான 50 நாட்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது.