ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளியான ஒரே படத்தில், அதுவும் ஒரே பாடலில் தனது புருவ சிமிட்டல்கள் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து புருவ அழகி என அழைக்கப்படும் அளவுக்கு ஓவர் நைட்டில் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர்.. அதன்பிறகு இவருக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என படவாய்ப்புகள் ஓரளவுக்கு தேடிவந்தன.
அதேசமயம் சோசியல் மீடியா பக்கத்திலும் ரொம்பவே ஆக்டிவாக இருந்துவருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கின்றனர். அதனால் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் பிரியா வாரியர்,
ஆனால் இதற்கு அப்படியே நேர்மாறாக தற்போது புடவை கட்டி காதருகில் ரோஜாப்பூ ஒன்றை வைத்து மஹாராஷ்டிரா மாநிலத்து கிராமத்துப்பெண் போல வயல்வெளியின் பின்னணியில் ஒரு சில புகைப்படங்களை எடுத்து அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் பிரியா வாரியார். அவரது கவர்ச்சிகரமான புகைப்படங்களுக்கு கிடைப்பது போன்றே இந்த புகைப்படங்களும் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகின்றன..