ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
படம் : மவுனம் பேசியதே
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : சூர்யா, நந்தா, த்ரிஷா
இயக்கம் : அமீர்
தயாரிப்பு : அபராஜீத் பிலிம்ஸ்
பருத்திவீரன் தந்த அமீரின் முதல் படம், மவுனம் பேசியதே! ஜோடி படத்தில், சிம்ரனின் தோழியரில் ஒருவராக நடித்த த்ரிஷா, கதாநாயகியாக அறிமுகமான படம், இது தான்.
சூர்யாவும், நந்தாவும் நண்பர்கள். நந்தாவிற்கும், த்ரிஷாவிற்கும் திருமணம் நடத்த, அவரது பெற்றோர் விரும்புகின்றனர். நந்தா, வேறொரு பெண்ணை விரும்புகிறார். இந்நிலையில் த்ரிஷா, தன்னை காதலிப்பதாக, சூர்யா நினைக்கிறார். இந்த காதல் சதுரங்கம், சுமுகமாக நிறைவடைந்தால், அது தான் மவுனம் பேசியதே!
'எங்கே பார்த்தாலும் உங்க தொல்லை தாங்க முடியலையே...' என, காதலை வெறுக்கும் ஒருவன், காதலினால் எவ்வாறு மாறுகிறான் என்பதை, சூர்யா தன் உடல் மொழியால், மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யாவின் நண்பராக நந்தா. 'பிளைபாய்' என, சுற்றும் கதாபாத்திரம். இருவரும் இடம்பெரும் காட்சிகளில், கிண்டல்கள் தெறிக்கவிட்டன. படத்தை நிறைவாக முடித்து வைக்கும் பணி, லைலாவிற்கு. அதிவேகமாக காரை இயக்கி, கண்ணாடி இறக்கி, புன்னகையுடன் லைலா வரும்போது, அவ்வளவு சந்தோஷம் ரசிகர்களுக்கும்.
காதலுக்கு எதிராக சூர்யா பேசும்போதெல்லாம், தியேட்டரில் கைத்தட்டல் பலமாக எழுந்தது. குறிப்பாக, கல்யாண மண்டபத்தில் நடக்கும் களேபரம் எல்லாம், செம துாள். ராம்ஜியின் ஒளிப்பதிவு, எளிமையான காட்சியையும், பிரமாண்டமாக காட்டியது.
யுவன் சங்கர் ராஜா இசையில், 'ஆடாத ஆட்டம் எல்லாம், அறுபது ஆயிருச்சு, சின்ன சின்னதாய், என் அன்பே என் அன்பே...' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படம் தெலுங்கில், ஆதந்தே அடோ டைப் என, 'ரீமேக்' செய்யப்பட்டது.
நமக்கென்ன கிடைக்கும் என்பது, ஏற்கனவே எழுதியிருக்கும்... அது தான், மவுனம் பேசியதே!