ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படம் : மவுனம் பேசியதே
வெளியான ஆண்டு : 2002
நடிகர்கள் : சூர்யா, நந்தா, த்ரிஷா
இயக்கம் : அமீர்
தயாரிப்பு : அபராஜீத் பிலிம்ஸ்
பருத்திவீரன் தந்த அமீரின் முதல் படம், மவுனம் பேசியதே! ஜோடி படத்தில், சிம்ரனின் தோழியரில் ஒருவராக நடித்த த்ரிஷா, கதாநாயகியாக அறிமுகமான படம், இது தான்.
சூர்யாவும், நந்தாவும் நண்பர்கள். நந்தாவிற்கும், த்ரிஷாவிற்கும் திருமணம் நடத்த, அவரது பெற்றோர் விரும்புகின்றனர். நந்தா, வேறொரு பெண்ணை விரும்புகிறார். இந்நிலையில் த்ரிஷா, தன்னை காதலிப்பதாக, சூர்யா நினைக்கிறார். இந்த காதல் சதுரங்கம், சுமுகமாக நிறைவடைந்தால், அது தான் மவுனம் பேசியதே!
'எங்கே பார்த்தாலும் உங்க தொல்லை தாங்க முடியலையே...' என, காதலை வெறுக்கும் ஒருவன், காதலினால் எவ்வாறு மாறுகிறான் என்பதை, சூர்யா தன் உடல் மொழியால், மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தார். சூர்யாவின் நண்பராக நந்தா. 'பிளைபாய்' என, சுற்றும் கதாபாத்திரம். இருவரும் இடம்பெரும் காட்சிகளில், கிண்டல்கள் தெறிக்கவிட்டன. படத்தை நிறைவாக முடித்து வைக்கும் பணி, லைலாவிற்கு. அதிவேகமாக காரை இயக்கி, கண்ணாடி இறக்கி, புன்னகையுடன் லைலா வரும்போது, அவ்வளவு சந்தோஷம் ரசிகர்களுக்கும்.
காதலுக்கு எதிராக சூர்யா பேசும்போதெல்லாம், தியேட்டரில் கைத்தட்டல் பலமாக எழுந்தது. குறிப்பாக, கல்யாண மண்டபத்தில் நடக்கும் களேபரம் எல்லாம், செம துாள். ராம்ஜியின் ஒளிப்பதிவு, எளிமையான காட்சியையும், பிரமாண்டமாக காட்டியது.
யுவன் சங்கர் ராஜா இசையில், 'ஆடாத ஆட்டம் எல்லாம், அறுபது ஆயிருச்சு, சின்ன சின்னதாய், என் அன்பே என் அன்பே...' உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இப்படம் தெலுங்கில், ஆதந்தே அடோ டைப் என, 'ரீமேக்' செய்யப்பட்டது.
நமக்கென்ன கிடைக்கும் என்பது, ஏற்கனவே எழுதியிருக்கும்... அது தான், மவுனம் பேசியதே!