'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லாலை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதன் முதலில் 200 கோடி வசூலை ஈட்டிய மலையாள படம் என்கிற பெயரையும் பெற்றது. தற்போது அந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது எம்பிரான் படத்திற்கு முன்னதாக மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் பிரித்விராஜ். லூசிபர் படத்தை தயாரித்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது




