எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் மகாபாரதம் புகழ் சதீஷ் கவுல் கொரோனாவுக்கு பலியானார். இதை தொடர்ந்து பாலிவுட் சின்னத்திரை நடிகைகள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டதில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
முன்னதாக இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை தஸ்னிம் சேக்குக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பிறகு தான் அல்பனா புச்சும், நிதி ஷாவும் பரிசோதனை செய்து கொண்டனர். தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.