எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், கத்ரினா கைப், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள பாலிவுட் படம் சூர்யவன்ஷி. ரோகித் ஷெட்டி இயக்கி உள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரோகித்தும் தயாரித்துள்ளார். முன்னணி நடிகர்கள் நடிக்க சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனா தளர்வுகள் அமுலுக்கு வந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டருக்கு கூட்டம் வராத காரணத்தால், சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 3 முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்துள்ள படம் என்பதோடு மூவருமே போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ள படம் என்பதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களும் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தார்கள்.
ஏப்ரல் 30ம் தேதி சூர்யவன்ஷி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சூர்யவன்ஷி வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடையாவிட்டால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.