எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ஆலியா பட், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்து வரும் ராம்சேது படப்பிடிப்பின்போது, தனக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் தெரிந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் தற்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தினார்
அந்த வகையில் ராம்சேது படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் 45 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, படப்பிடிப்பில் நுழைவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனாலும் இத்தனை பேருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.