'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கொரோனா இரண்டாவது அலை தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் மகாராஷ்டிராவில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பையில் வசிக்கும் பாலிவுட் நடிகர்களான அக்ஷய் குமார், ஆலியா பட், அமீர்கான் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அக்ஷய் குமார், தான் நடித்து வரும் ராம்சேது படப்பிடிப்பின்போது, தனக்கு கொரோனா பாசிட்டிவ் அறிகுறிகள் தெரிந்ததால், தன்னை தனிமைப்படுத்தி கொண்டதுடன் தற்போது மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சையும் பெற்று வருகிறார். மேலும் கடந்த சில நாட்களில் தன்னை சந்தித்த நபர்களையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் வலியுறுத்தினார்
அந்த வகையில் ராம்சேது படத்தில் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்த நூற்றுக்கணக்கான துணை நடிகர்களில் 45 பேருக்கு கொரோனா பாசிடிவ் என்கிற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் மல்ஹோத்ரா கூறும்போது, படப்பிடிப்பில் நுழைவதற்கு முன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர் ஆனாலும் இத்தனை பேருக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை என்கிறார் அதிர்ச்சி விலகாமல்.