பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
கொரோனாவின் அடுத்த அலை மிகவும் தீவிரமாகிக் கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். ஏற்கனவே ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது புதிதாக ஹிந்தி நடிகர்கள் கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பெட்னெகர் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, நடிகர் அக்ஷய்குமார் பாதிக்கப்பட்டு தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்து இருந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சினிமா பிரபலங்களை அடுத்தடுத்து கொரோனா தாக்கி வருவதால் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அனைரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி பலரும் கேட்டு வருகிறார்கள்.