‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் சமீபத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளான நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது : ‛‛இன்று(ஏப்., 4) காலை எனக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்'' என தெரிவித்துள்ளார் அக்ஷய்.