சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கொரோனாவின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட வேகமாக பரவி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்நோய்க்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமிர் கான், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் சமீபத்தில் இந்நோய் தொற்றுக்கு ஆளான நிலையில் இப்போது மற்றுமொரு முன்னணி நடிகரான அக்ஷய் குமாரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டதாவது : ‛‛இன்று(ஏப்., 4) காலை எனக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டேன். உரிய மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். விரைவில் இதிலிருந்து மீண்டு வருவேன்'' என தெரிவித்துள்ளார் அக்ஷய்.