புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கொரோனா தொற்றுக்கு இதுவரை பல பாலிவுட் நடிகர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் இறந்தும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ரன்பீர் கபூருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரன்பீருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அப்போது செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரன்பீர் கபூரின் தாயும், நடிகையுமான நீது கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.
இதேபோல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.