சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் தேர்வான திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை, நடிகை பிரியங்கா சோப்ரா, தன் கணவர் நிக் ஜோனஸ் உடன், இணைந்து வெளியிட உள்ளார்.
சர்வதேச திரைப்பட விருதுகளில், மிகச் சிறந்ததாக, ஆஸ்கர் கருதப்படுகிறது. 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு, 23 பிரிவுகளில், இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பு, வரும், 15ம் தேதி, ஆஸ்கர் வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா, தன் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடன் இணைந்து, டிக்டாக் வலைதளத்தில் ஒரு, வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ஆஸ்கர் விருது இறுதிப் போட்டிக்கு தேர்வான திரைப்படங்களை, கணவருடன் இணைந்து அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக, டுவிட்டர் வலைதளத்திலும், பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா காரணமாக, ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்., 28லிருந்து, ஏப்., 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.