20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜன.,26ல் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரணவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் கான் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சல்மான் கான் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு எந்த தரப்பினருக்கும் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ பதில் சொல்லாமல், “நல்ல, மிகச் சரியான, உன்னதமான விஷயம் நிச்சயம் நடந்தே தீர வேண்டும்” என நழுவலாக பதில் கூறியுள்ளார்.