ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டில்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜன.,26ல் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதில் பாலிவுட் நட்சத்திரங்களான கங்கனா ரணவத், அக்சய் குமார், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அதேசமயம் கான் நடிகர்களான அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர் இந்த விஷயத்தில் கருத்து கூறாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் சல்மான் கான் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் விவசாயிகள் போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு எந்த தரப்பினருக்கும் சாதகமாகவோ, எதிர்ப்பாகவோ பதில் சொல்லாமல், “நல்ல, மிகச் சரியான, உன்னதமான விஷயம் நிச்சயம் நடந்தே தீர வேண்டும்” என நழுவலாக பதில் கூறியுள்ளார்.