'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தனது டுவிட்டரில் நாட்டு நடப்புகள் பற்றிய தனது கருத்தை துணிச்சலுடன் வெளியிடுவார். இதற்காக அவர் பல மிரட்டல்கள், வீடு இடிக்கப்பட்டது போன்ற பாதிப்புகளை சந்தித்தபோதும் தனது கருத்தை துணிச்சலாக கூறி வருகிறார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை தொடக்கம் முதலே கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ரிஹானா டுவீட்டுக்கு பதில் தெரிவித்து கங்கனா ரணாவத் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, கங்கனா வெளியிட்டிருந்த பதிவுகளை, டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. கங்கனா டுவிட்டர் நிறுவன விதிகளை மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கங்கனாவின் பதிவுகள் நீக்கப்படுவதும், அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிற ஒன்று.