ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
சமூக வலைத்தளங்களில் நடிகர்கள், நடிகைகள், சினிமா பிரபலங்கள் பலரும் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றை சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகப் பதிவிடாமல் அதற்கான வேலைகளைச் செய்வதற்க 'அட்மின்' என சிலரை வைத்து வேலை வாங்குவார்கள். அந்தக் காலத்தில் ரசிகர்கள் எழுதும் கடிதங்களைப் படித்துப் பார்க்காமல், நடிகர்களின் உதவியாளர்களே அவற்றிற்கு பதில் கடிதம் எழுதி அனுப்புவார்கள். அது போலத்தான் இந்தக் காலத்தில் இந்த சமூக வலைத்தள 'அட்மின்'களும் வேலை செய்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் தற்போது அவருடைய டுவிட்டர் கணக்கிற்கு அட்மின்--ஐ நியமித்துள்ளார். அவரது கணக்கின் சுயவிவரத்தில் தற்போது ,“எஸ்கே குழுவினர் நிர்வகிக்கும் அதிகாரப்பூர்வ கணக்கு,” என மாற்றப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'மாவீரன்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு ஜுலை 2ல் நடைபெற உள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் ஏன் என்று தெரியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி, “எனது அன்பான சகோதர சகோதரிகளே, டுவிட்டரிலிருந்து சில காலம் விலகி உள்ளேன், சீக்கிரமே திரும்பி வருவேன், கவனமாக இருங்கள். படங்கள் பற்றிய அப்டேட்களை எனது குழுவினர் இங்கு பகிர்வார்கள்,” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து வருவதால் இந்த தற்காலிக விலகல் என்றார்கள். 'மாவீரன்' படம் இன்னும் 20 நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அப்போது கூட சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கம் வருவாரா அல்லது விலகியே இருப்பாரா ?.