ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை, ஓராண்டுக்கு முன், காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் அவருக்கு வாரிசு வரப் போகிறது என்றும், நாலா பக்கமும் செய்திகள் பரப்பப்பட்டன. இந்த செய்திகளை அறிந்ததும், விராட் கோலியை விட, அனுஷ்கா ரொம்பவும் கோபம் அடைந்தார்.
இது குறித்து, அனுஷ்கா கூறியிருப்பதாவது: செய்தி வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்தியாக்க துணிந்து விட்டனர். அப்படி எழுதப்படும் அல்லது பரப்பப்படும் செய்தி, ஓரிரு மாதங்களில் பொய் என நிரூபிக்கப்பட்டு விடும். ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல், அதே போன்றதொரு வேறொரு செய்தி குறித்து, தகவல் பரப்பத் துவங்கி விடுவர். நான் கர்ப்பமாக இருப்பதாக வெளி வந்த தகவல் உண்மையல்ல. இப்போதைக்கு குழந்தை பெற்றும் எண்ணம் எனக்கு கொஞ்சமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.