கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டைவிட ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐந்தே நாட்களில் விரைவாக 100 கோடி வசூலைக் கடந்த 2.0 படம் தற்போது 150 கோடியைக் கடந்துள்ளது.
அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் நடித்த நேரடி ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' வசூலையும் '2.0' வசூல் தொகை கடந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2.0 படத்தின் வசூல் வார நாட்களை விட அதிகமாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
அக்ஷய் குமார் படத்தில் இருந்ததால் இது சாத்தியமானது என்ற குரலும் எழாமல் இல்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு முதன்முதலாக 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் வசூலை '2.0' படம் முறியடிக்க முடியாமல் போனது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம்தான்.