ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் படங்களில் தந்தை கேரக்டர் என்றால் அலோக்நாத் தான். நம்ம ஊர் நாசர், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் மாதிரி நல்ல இமேஜ் உள்ள குணசித்தர நடிகர். இவர் மீது பிரபல ஹிந்தி பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.
விண்டா நந்தா தயாரித்த டி.வி தொடரின் நாயகியை அலோக்நாத் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் பகீர் புகார் தெரிவித்தார். இவர் தவிர பெயர் குறிப்பிடாத மேலும் இரு நடிகைகள் அலோக்நாத் மீது புகார் கூறினார்கள். இந்த புகார்களை மறுத்த அலோக்நாத், விண்டா நந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் அலோக்நாத்தை அழைத்தது. அந்த அழைப்பை அலோக்நாத் நிராகரித்து விட்டார். "நீதிமன்றத்தின் முன்தான் விளக்கம் அளிப்பேன். மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை" என்று அவர் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதாலும், சங்கத்தின் விதிகளை மீறியதாலும் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விட்டது நடிகர் சங்கம்.