தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மீ டூ இயக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் களத்திலும், சினிமாவிலும், இசைத் துறையிலும் இருக்கும் முன்னணியினர் மீதும் மீ டூ பாய்ந்து வருகிறது. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீதும் மீ டூ பாய்ந்திருக்கிறது. நேரடியான பாலியல் குற்றச்சாட்டாக இல்லாவிட்டாலும், பாலிவுட்டின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷப்னா மோடி பவனானி, பல பெண்கள் அமிதாப் மீது பாலியில் குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
நீங்கள் நடித்த பிங்க் படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.