வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு |

மீ டூ இயக்கம் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. அரசியல் களத்திலும், சினிமாவிலும், இசைத் துறையிலும் இருக்கும் முன்னணியினர் மீதும் மீ டூ பாய்ந்து வருகிறது. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மீதும் மீ டூ பாய்ந்திருக்கிறது. நேரடியான பாலியல் குற்றச்சாட்டாக இல்லாவிட்டாலும், பாலிவுட்டின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷப்னா மோடி பவனானி, பல பெண்கள் அமிதாப் மீது பாலியில் குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது:
நீங்கள் நடித்த பிங்க் படம் வெளியாகி உங்களுக்கு நல்ல பெயர் பெற்று தந்து இருக்கலாம். ஆனால் உங்களுடைய நல்ல பெயர் விரைவில் கெடப்போகிறது. உங்களுடைய சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். உண்மை கண்டிப்பாக வெளியே வரத்தான் செய்யும். இப்போது நீங்கள் உங்களது கையை கடிக்க தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அமிதாப்பச்சனின் பாலியல் தொல்லைகள் குறித்து பல பெண்கள் கூறியதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் வெளியே வந்து உண்மையை சொல்ல வேண்டும். இவ்வாறு சப்னா மோடி பவனானி கூறியுள்ளார்.




