சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர் நடிகர் ஜான் விஜய். அதேசமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றங்களுக்கு எதிரான மீடூ என்கிற பிரச்சாரம் பரபரப்பாக கிளம்பியபோது அதில் ஜான் விஜய்யும் குற்றசாட்டுக்கு ஆளானார். அந்த சமயத்தில் அவர் அது குறித்து விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்ததோடு எதிர்காலத்தில் அப்படி இனி நடக்காது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் இது போன்று ஒரு மீடூ குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் ஜான் விஜய்.
ஒரு பெண் பத்திரிகையாளர் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு தான் சென்றிருந்தபோது அங்கே வந்திருந்த நடிகர் ஜான் விஜய் தன்னை தவறான கண்ணோட்டத்துடன் தேவையற்ற வார்த்தைகளை பேசி அணுக முயற்சித்ததாகவும், ஆனால் அங்கிருக்கும் ஊழியர்கள் மற்றும் பவுன்சர்கள் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பானவர்கள் என்பதால் தான் அவரிடம் இருந்து தப்பித்ததாகவும் கூறி எப்போதுமே இந்த மீ டூ பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசி வரும் பின்னணி பாடகி சின்மயிக்கு இது குறித்து தெரிவித்திருந்தார்.
அதில் ஜான் விஜய் தான் ஒரு நடிகர் என்கிற கோதாவில் இதுபோன்று ஹோட்டலுக்கு, பார்ட்டிகளுக்கு வரும் பெண்கள் சிலரை வலுக்கட்டாயமாக குடிக்க அழைப்பதும் மற்றும் தன்னுடன் நடனமாட அழைப்பதும் என அவர்களை தனது அழைப்புக்கு நோ சொல்ல முடியாமல், எஸ் சொல்ல வைக்கும் விதமாக நடந்து கொள்வதும் என அவரது செயல்கள் பற்றி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இது குறித்த ஸ்கிரீன்ஷாட்டுகளை சின்மயி தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஜான் விஜய் மீதான இந்த புதிய மீ டூ குற்றச்சாட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.