Advertisement

சிறப்புச்செய்திகள்

தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 'வசந்த மாளிகை' ரகசியம், ஒரு பிரிண்ட் பல தியேட்டர்கள்

30 ஜூலை, 2024 - 01:11 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Vasantha-maligai-Secret,-One-Print-Multiple-Theatres
Advertisement

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் கை விரலில் வைத்துக் கொள்கிற அளவிற்காக மெம்மரிடி கார்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தனை தியேட்டரில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். சென்னையில் இருந்து கொண்டே தென்காசி தியேட்டருக்கு படத்தை ஆன்லைனில் அனுப்ப முடியும்.

ஆனால் அந்த காலத்தில் பிலிம் பிரிண்ட் போட வேண்டும். ஒவ்வொரு பிரிண்டுக்கும் கணிசமான தொகை செலவாகும். இதனால் சென்னையில் நான்கைந்து பிரிண்டுகள், மற்ற மாவட்ட தலைநகர்களுக்கு 2 பிரிண்டு மற்ற பெரிய நகராட்சிகளுக்கு ஒரு பிரிண்டு என சுமார் 40 முதல் 50 பிரிண்டுகள் போட்டு அனுப்பி வைக்கப்படும்.

இந்த மாதிரியான நிலையில் ஏதாவது ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானால் ஒரே பிரிண்டை வைத்து மேலும் சில தியேட்டர்களில் படத்தை ஓட்டி விடுவார்கள். படம் திரையிடும் நேரத்தை 30 நிமிட இடைவெளிவிட்டு அறிவிப்பார்கள். ஒரு தியேட்டரில் 30 நிமிடம் ஓடிய ரீலை எடுத்துக் கொண்டு அடுத்த தியேட்டருக்கு ஓடுவார்கள் இப்படியாக அந்த ரீலில் மூன்று நான்கு தியேட்டர்களுக்கு படம் செல்லும்.

இப்படி சினிமா ரீல்கள் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடிய சம்பவங்களின் ஹைலைட் இலங்கை யாழ்பாணத்தில் நடந்தது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண நகரில் எந்த ஒரு படமும் ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே திரையிடப்படும். தமிழ்படங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது மூன்று பிரதிகள் மட்டுமே தருவிக்கப்படும். அதில் இரு பிரதிகள் தலைநகர் கொழும்புவிலும் ( கெப்பிட்டல், பிளாசா ) மறு பிரதி யாழ் நகரிலும் திரையிடப்படும்.

1973ல் 'வசந்தமாளிகை' திரையிடப்பட்டது. வழக்கம்போல 3 பிரிண்டுகள் மட்டும் அனுப்பப்பட்டது. அந்த வகையில் யாழ்பாணத்திற்கு ஒரு பிரிண்ட் சென்றது. ஆனால் படத்தை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் தியேட்டர் முன் குவிந்தார்கள். முட்டி மோதிய ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு அரங்கிலாவது படத்தை திரையிட்டாலேயே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை.

இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கொழும்பில் இருந்து ஒரு பிரதியை கேட்க முடியாது. ஏனெனில் கொழும்பிலும் இதே நிலைமைதான். தமிழ்நாட்டில் இருந்து வரவைக்கவும் கால அவகாசம் தேவைப்படும். எனவே யாழ் நகரில் இருக்கும் ஒரு பிரதியை வைத்தே நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தியேட்டர் நிர்வாகம் சிந்தித்தது. ஒரே ஒரு பிரதியை வைத்துக் கொண்டே இரண்டு அரங்குகளில் படம் ஒரே நாளில் திரையிடப்பட்டது.

இப்படி 100 நாட்கள் வரை ஒரே பிரதியை வைத்துக்கொண்டே இரு அரங்குகள் மூலம் வசந்த மாளிகை திரையிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழ்நாட்டிலும் இது கடைபிடிக்கப்பட்டதாக சொல்வார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செம்பருத்தி டீ சிக்கலில் நயன்தாரா : டாக்டருடன் வலுக்கும் மோதல்செம்பருத்தி டீ சிக்கலில் நயன்தாரா : ... மீண்டும் மீடூ சர்ச்சையில் ஜான் விஜய் : சின்மயி வெளியிட்ட பதிவு மீண்டும் மீடூ சர்ச்சையில் ஜான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !