Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 'வசந்த மாளிகை' ரகசியம், ஒரு பிரிண்ட் பல தியேட்டர்கள்

30 ஜூலை, 2024 - 01:11 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Vasantha-maligai-Secret,-One-Print-Multiple-Theatres

இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் கை விரலில் வைத்துக் கொள்கிற அளவிற்காக மெம்மரிடி கார்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. எத்தனை தியேட்டரில் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் திரையிட முடியும். சென்னையில் இருந்து கொண்டே தென்காசி தியேட்டருக்கு படத்தை ஆன்லைனில் அனுப்ப முடியும்.

ஆனால் அந்த காலத்தில் பிலிம் பிரிண்ட் போட வேண்டும். ஒவ்வொரு பிரிண்டுக்கும் கணிசமான தொகை செலவாகும். இதனால் சென்னையில் நான்கைந்து பிரிண்டுகள், மற்ற மாவட்ட தலைநகர்களுக்கு 2 பிரிண்டு மற்ற பெரிய நகராட்சிகளுக்கு ஒரு பிரிண்டு என சுமார் 40 முதல் 50 பிரிண்டுகள் போட்டு அனுப்பி வைக்கப்படும்.

இந்த மாதிரியான நிலையில் ஏதாவது ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானால் ஒரே பிரிண்டை வைத்து மேலும் சில தியேட்டர்களில் படத்தை ஓட்டி விடுவார்கள். படம் திரையிடும் நேரத்தை 30 நிமிட இடைவெளிவிட்டு அறிவிப்பார்கள். ஒரு தியேட்டரில் 30 நிமிடம் ஓடிய ரீலை எடுத்துக் கொண்டு அடுத்த தியேட்டருக்கு ஓடுவார்கள் இப்படியாக அந்த ரீலில் மூன்று நான்கு தியேட்டர்களுக்கு படம் செல்லும்.

இப்படி சினிமா ரீல்கள் தியேட்டர் விட்டு தியேட்டர் ஓடிய சம்பவங்களின் ஹைலைட் இலங்கை யாழ்பாணத்தில் நடந்தது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண நகரில் எந்த ஒரு படமும் ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே திரையிடப்படும். தமிழ்படங்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது மூன்று பிரதிகள் மட்டுமே தருவிக்கப்படும். அதில் இரு பிரதிகள் தலைநகர் கொழும்புவிலும் ( கெப்பிட்டல், பிளாசா ) மறு பிரதி யாழ் நகரிலும் திரையிடப்படும்.

1973ல் 'வசந்தமாளிகை' திரையிடப்பட்டது. வழக்கம்போல 3 பிரிண்டுகள் மட்டும் அனுப்பப்பட்டது. அந்த வகையில் யாழ்பாணத்திற்கு ஒரு பிரிண்ட் சென்றது. ஆனால் படத்தை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் தியேட்டர் முன் குவிந்தார்கள். முட்டி மோதிய ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இரண்டு அரங்கிலாவது படத்தை திரையிட்டாலேயே நிலைமையை சமாளிக்க முடியும் என்ற நிலை.

இந்த நிலைமையை சமாளிப்பதற்காக கொழும்பில் இருந்து ஒரு பிரதியை கேட்க முடியாது. ஏனெனில் கொழும்பிலும் இதே நிலைமைதான். தமிழ்நாட்டில் இருந்து வரவைக்கவும் கால அவகாசம் தேவைப்படும். எனவே யாழ் நகரில் இருக்கும் ஒரு பிரதியை வைத்தே நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தியேட்டர் நிர்வாகம் சிந்தித்தது. ஒரே ஒரு பிரதியை வைத்துக் கொண்டே இரண்டு அரங்குகளில் படம் ஒரே நாளில் திரையிடப்பட்டது.

இப்படி 100 நாட்கள் வரை ஒரே பிரதியை வைத்துக்கொண்டே இரு அரங்குகள் மூலம் வசந்த மாளிகை திரையிடப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகே தமிழ்நாட்டிலும் இது கடைபிடிக்கப்பட்டதாக சொல்வார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
செம்பருத்தி டீ சிக்கலில் நயன்தாரா : டாக்டருடன் வலுக்கும் மோதல்செம்பருத்தி டீ சிக்கலில் நயன்தாரா : ... மீண்டும் மீடூ சர்ச்சையில் ஜான் விஜய் : சின்மயி வெளியிட்ட பதிவு மீண்டும் மீடூ சர்ச்சையில் ஜான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூலை, 2024 - 07:07 Report Abuse
Columbus No Sir. This practice of using same print for exhibition of the film in two theatres in same town was in vogue even in Pune in 1960/70s. They were using runners to carry the film reels. There used to be four reels of roughly 40/45 minutes of running time.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in