ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
இந்தியாவின் பிரபல இயக்குனரான ஷியாம் பெனகலிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பாலிவுட்டில் இயக்குனர் ஆனவர் கல்பனா லஜ்மி. பிரபல நடிகை தீபிகா படுகோனேவின் உறவினர். 40 வருடங்களாக திரைத் துறையில் இருந்த கல்பவான இயக்கியது 10 படங்கள்தான். ஆனால் அத்தனை படங்களும் ஏதோ ஒரு வகையில் சிறப்பானதாக இருக்கும். அல்லது விருதுகளை குவித்திருக்கும்.
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை இயக்கி கவனம் பெற்றவர். ஏக்பல், டாமன், ருடாலி, சிங்காரி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ருடாலி படத்தில் ராஜ் பப்பர், டிம்பிள் கபாடியா நடித்து இருந்தனர். இந்தப் படம் சிறந்த வெளிநாட்டு பட பிரிவுக்கான ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இவர் இயக்கிய கடைசி படம் சிங்காரி. இதில் மிதுன் சக்கரவர்த்தி, சுஷ்மிதா சென் நடித்து இருந்தனர்.
64 வயதான கல்பனாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவருக்கு சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். அவரது உடலுக்கு பாலிவுட் முன்னணி நடிகர் நடிகைகள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.