ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை பரிணிதி சோப்ரா, அக்ஷ்ய் குமார் உடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். கேசரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அனுராக் சிங் இயக்க, கரண் ஜோகர் மற்றும் அக்ஷ்ய் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிப்பது குறித்து பரிணிதி சோப்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது...
கேசரி படத்தில் எனது ரோல் என்ன என்பதை நான் சொல்ல மாட்டேன், அது ரகசியம். இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன். இந்த வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெரிய படம் இது. அக்ஷ்ய் குமார் உடன் நடிக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை, அது இப்போது நிறைவேறி உள்ளது. படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.