ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றார். ஐஸ்வர்யா வருவதை அறிந்து அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். புகைப்பட கலைஞர்கள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளை போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டினார். இதனால் அவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, அவர்களை வேண்டாம், இது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, குழந்தைகள் நிகழ்ச்சி, அவர்கள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் புகைப்படக்காரர்கள் அதை கேட்கவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் இவர்களின் செயலை பார்த்து கண்கலங்கி விட்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.