ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் - நடிகை கங்கனா ரனாவத் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹிருத்திக் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கங்கனா கூறி வந்தார். தற்போது கங்கனாவின் நிர்வாண படங்களை ஹிருத்திக் தான் வெளியிட்டிருப்பதாக கங்கனாவின் சகோதரி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் கங்கனாவுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என ஹிருத்திக் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் தனியார் ஆங்கில டிவி சேனல் ஒன்றிற்கு ஹிருத்திக் அளித்த பேட்டியில், 2012ம் ஆண்டு ஜோர்டானில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் தனது அறையில் வந்து தங்கியிருந்ததாக கூறினார். நள்ளிரவில் தனது கதவு மிக வேகமாக தட்டப்படுவதை அறிந்து எழுந்து வந்து பார்த்த போது நடிகை கங்கனா ரனாவத் முழு போதையில் சுய நினைவு இன்றி தள்ளாடிக் கொண்டிருந்ததாக ஹிருத்திக் கூறியுள்ளார்.
பின்னர் கங்கனாவின் சகோதரியை அழைத்து நிலைமையை எடுத்துக் கூறியதாகவும், அவர் வந்து கங்கனாவை அழைத்துச் சென்றதாகவும் ஹிருத்திக் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் நடித்த போது சக நடிகை என்பதை தவிர்த்து கங்கனாவுடன் வேறு எந்த உறவும் தனக்கு இல்லை என்று திட்டவட்டமாக ஹிருத்திக் தெரிவித்துள்ளார். ஆனால் கங்கனா தான் ஏதோ ஒன்றை கற்பனை செய்து கொண்டு தனக்கு தொடர்ந்து இமெயில்கள் அனுப்பி தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.