மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பிரபல பெங்காலி நடிகை காஞ்சனா மோத்ரா. இவர் ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். காஞ்சனா நேற்று முன்தினம் கோல்கட்டாவில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நள்ளிரவில் காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிவந்துள்ளார்.
ஒரு சிக்னலில் அவர் கார் நின்று கொண்டிருந்தபோது 3 இளைஞர்கள் குடிபோதையில் அவர் காரை மறித்தனர். அதில் ஒருவன் கார்சாவியை எடுத்துக் கொள்ள மற்ற இருவரும் காஞ்சானை காரில் இருந்து வெளியே இழுத்தனர். அவரை பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தள்ளிச் சென்றுள்ளனர். இதனால் நிலை குலைந்த காஞ்சனா உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்தனர். இதை கண்டதும் அந்த இளைஞர்கள் காஞ்சனாவை கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக காஞ்சனா போலீசில் புகார் செய்தார். அவர் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் சங்கர் தவுலி, சூரஜித் பாண்டே ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக இருக்கும் இன்னொரு இளைஞரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோல்கட்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.